states

img

உ.பி. பாஜக அரசு அமைத்த கோசாலையில் தீ விபத்து... 12 பசுக்கள் உயிரிழப்பு.....

பாக்பத்:
உத்தரப்பிரதேசத்தில் பசுமாடுகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அம்மாநில பாஜகஅரசு, ஏராளமான கோசாலைகளை அமைத்துள் ளது. இந்த கோசாலைகளில் பசுக்களின் பராமரிப்பு,தீவனங்களுக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால், கோசாலைகளில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக, பசுமாடுகள் தீவனமின்றிபட்டினியால் இறந்துபோவதும், போதிய பராமரிப் பின்மை காரணமாக கொத்துக் கொத்தாக நோயால்செத்துமடிவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.இந்நிலையில்தான், செவ்வாயன்று பாக்பத் மாவட்டம் நக்லா பாடி கிராமத்திலுள்ள சோசாலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி12 பசுமாடுகள் பரிதாபமான முறையில் இறந்துள்ளன. 18 பசுமாடுகள் கடுமையான தீக்காயம் அடைந்துள்ளன. கோசாலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் திடீரென உயர் மின்அழுத்தம் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துணைஆட்சியர் அஜய் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

;